ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூரத்து உற்சவம் --ஸ்ரீ கோதை ரெங்கமன்னார் சயன சேவை. “கண்ணா! வேண்டுவன கேள் என்று சொன்னாய். வேண்டுவதற்கு ஆறு பொருட்கள் கேட்கிறேன். தருவாயா? முதலில் ஒரு சங்கு வேண்டும்.” “சங்கா? விட்டால் என்னுடைய கைச்சங்கையே கேட்பீர்களோ?” “மதுசூதனா! உன்னுடைய கைச்சங்காகிய பாஞ்சசன்னியம் ஒலிக்கும் போது உலகமே நடுங்கும். படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே என்று என் தந்தை உனக்குப் பல்லாண்டு பாடியபடி ஒலிக்கின்ற சங்கங்கள் வேண்டும். பாஞ்சசன்னியத்தையே கொடுத்தாலும் எங்களுக்கு உவப்பே!” ”சரி. தருகிறேன். வேறென்ன வேண்டும்.” “இரண்டாவதாக பறை ஒன்று வேண்டும். அதுவும் ஏறுகோட்பறை போன்ற பெரிய கொட்டுப்பறை வேண்டும்.” “தந்தேன். மூன்றாவதாக?” “பல்லாண்டு பாடுகின்ற அடியவர்கள் வேண்டும். உன்னையே எண்ணிப் பாடும் நல்ல சுற்றம் வேண்டும்.” “அடியவர்கள்தானே. நிறைய இருக்கிறார்கள். நான் சொல்லி அனுப்பிவைக்க வேண்டாம். நீ கூப்பிட்டாலே வந்துவிடுவார்கள். அவர்கள் என்னோடு இருப்பதை விட என் பெயரைச் சொல்கின்றவர்களோடு இருக்கும் நேரமே அதிகம். ஆகட்டும். அடுத்ததைச் சொல்.” ”அணையாச் சுடர் விளக்குகளும், உன்னுடைய கொடியும், தலைக்கு மேல் பந்தலும் வேண்டும்.” “சங்கு, கொட்டு, பாட்டு, விளக்கு, கொடி, பந்தல்… இவை போதுமா? இந்த ஆறையும் கேட்பதற்காகவா என்னை நாடி வந்தாய்?” என்ன வேண்டும் என்று இறைவன் நம்மைக் கேட்டால் என்ன கேட்போம்? ...... நாமெல்லாம் எவ்வளவு சுயநலமிகள் என்றும் இந்த வாழ்க்கையின் மீது எவ்வளவு ஆசை கொண்டவர்கள் என்பதும் விளங்கும். ஆண்டவனே ”என்ன வேண்டும்?” என்று கேட்கும் போது “ஆண்டவனே! நீயே வேண்டும்!” என்று அவள் கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கவில்லை. ஏன்? கேட்காமலே கொடுப்பவனிடம் கேட்டுப் பெறுவதா சிறப்பு? அப்படியானால் என்ன கேட்பது? அவனையே நினைத்துப் போற்றிப் பாடுவதற்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் கேட்டாள் கோதை. ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ! ஆஹா அற்புத காட்சிகள் ....முகநூலில் பதிவிட்ட பக்தருக்கு நன்றிகள் பல ... பார்க்க பார்க்க மனதை அள்ளும் கோதை நாயகி ... நாச்சியார் திருமொழி ஏழாம் திருமொழி கருப்பூரம்நாறுமோ? கமலப்பூநாறுமோ? * திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? * மருப்பொசித்தமாதவன்தன் வாய்ச்சுவையும்நாற்றமும் * விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே. (2) 567 கடலில்பிறந்து கருதாது * பஞ்சசனன் உடலில்வளர்ந்துபோய் ஊழியான்கைத்தலத் திடரில் * குடியேறித் தீயவசுரர் * நடலைப்படமுழங்கும் தோற்றத்தாய்நற்சங்கே. 568 அன்புடன் அனுபிரேம்
Thirumazhisai is a holy place located equidistant to Kancheepuram , Mahabalipuram and Mylapur in the present chengelpet district ( Tamilnadu) . This place is very famous for Lord Jagganatha Perum…
These are some of the titles for today’s date in Hindu calendar which is 10th day of month Ashwin. The day marks the victory of Maa Durga over the demon Mahishasura. The goddess fou…
வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் தரிசனம் ராம ராம ராம ராம !! ராம நாமத்தின் விலை.... இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது.... பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்...' என்றார். அவனும் அப்படியே செய்தான். காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, 'ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்...' என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே...' என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்...' என்றான். திகைத்த யமதர்ம ராஜா, 'ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது...' என்று எண்ணி, 'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்...' என்றார். 'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா...' என்றான். 'இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்...' என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார். இந்திரனோ, 'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்...' என்றார். 'யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்...' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர். அவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்...' என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று. அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை...' என்றனர். 'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா...' என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான். அலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்; அவனருளாலே அல்லல்களை வெல்வோம்! (படித்ததில் பிடித்தது) பெருமாள் திருமொழி பத்தாம் திருமொழி - அங்கணெடுமதின் ஸ்ரீராமாயண கதைச்சுருக்கம் தனமருவுவைதேகிபிரியலுற்றுத் தளர்வெய்திச்சடாயுவைவைகுந்தத்தேற்றி * வனமருவுகவியரசன்காதல்கொண்டு வாலியைக் கொன்று இலங்கைநகரரக்கர்கோமான் * சினமடங்கமாருதியால்சுடுவித்தானைத் தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் * இனிதமர்ந்தஅம்மானைஇராமன்தன்னை ஏத்துவாரிணையடியேஏத்தினேனே. 6 746 குரைகடலைஅடலம்பால்மறுகவெய்து குலைகட்டிமறுகரையைஅதனாலேறி * எரிநெடுவேலரக்கரொடும் இலங்கைவேந்தன் இன்னுயிர்கொண்டு அவன்தம்பிக்கு அரசுமீந்து * திருமகளோடினிதமர்ந்தசெல்வன்தன்னைத் தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் * அரசமர்ந்தானடிசூடும் அரசையல்லால் அரசு ஆகஎண்ணேன்மற்றரசுதானே. 7 747 அம்பொனெடுமணிமாடஅயோத்தியெய்தி அரசெய்திஅகத்தியன்வாய்த்தான்முன்கொன்றான் தன் * பெருந்தொல்கதைக்கேட்டுமிதிலைச்செல்வி உலகுய்யத்திருவயிறுவாய்த்தமக்கள் * செம்பவளத்திரள்வாய்த்தன்சரிதைகேட்டான் தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் * எம்பெருமான்தன்சரிதைசெவியால்கண்ணால் பருகுவோம் இன்னமுதம்மதியோமன்றே. 8 748 ஸ்ரீ ராம நாம மகிமை.. ..2018 ஸ்ரீ ராம நவமி -2019 ஸ்ரீ ராம சரித பஜனை.... 2020 மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் .... 2020 ராம ராம ராம ராம !! - வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் தரிசனம் .. 2020 16 வார்த்தை ராமாயணம் - ஸ்ரீ ராம நவமி ..2021 ராம ராம ஜெய ராஜாராம் ராம ராம ஜெய சீதா ராம். ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா ! அன்புடன் அனுபிரேம்